தங்களின் வருகைக்கு நன்றி

Friday, July 16, 2010

ரூபாய்க்கு புதிய வடிவம் கொடுத்த தமிழர்!!!

          சர்வதேச அரங்கில் நாம் தன்னிறைவு பெற்று முன்னேறுகிறோம் என்பதற்கு சான்றாக, இதோ நம் நாட்டு பணமான ரூபாயின் புதிய குறியீட்டுக்கு இன்று யூனியன் கேபினட் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது,எத்தனை பெருமை?!!!ப்ரிடிஷ் பவுண்ட்,அமெரிக்க டாலர், ஜப்பானிய யென் மற்றும் யூரோவுக்கு மட்டுமே இதுவரை சர்வதேச சந்தையில் குறியீடுகள் உண்டு.

         இப்போது அது நம் தாய் திருநாட்டிற்கும் கிடைக்கப்பெற்றுள்ளது, இனி வெகு விரைவில் இந்த குறியீட்டை கணிணி கீபோர்டுகளிலும், மென்பொருள்களிலும் காணலாம், இனி நம் ரூபாயையும் பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோநேசியா, நேபால் , ஸ்ரீலங்கா போன்ற மிக குறைந்த மாற்று-மதிப்பு கொண்ட நாடுகளின் ரூபாயையும் ஒப்பிட மாட்டார்கள்.நாம் அவர்களிடமிருந்து வேறுபட்டு தெரிவோம்!!!.

 
        இந்த குறியீட்டை திறம்பட வடிவமைத்திருப்பது IIT ல் பணி செய்து வரும் 32 வயது D.உதயகுமார். என்னும் சென்னைத் தமிழர், இவர் B.Arch. அண்ணா யுனிவர்சிட்டியில் முடித்துவிட்டு ,M.des, IIT மும்பையில் முடித்து , அங்கேயே PHD யும் முடித்துள்ளார்.

          அகில இந்திய அளவில் 3000 போட்டியாளர்கள் வடிவமைத்த குறியீடுகளில் இருந்து 5 குறியூடுகள் இறுதிகட்டத்துக்கு முன்னேறி இவரின் குறியீடு அனைவராலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பரிசுத்தொகையாக 2,50,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது . இதன் மூலம் இவர் ஏனைய மாநில டிசைனர்களை , தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார், இன்னும் 500 வருடமானாலும் இதை யாராலும் மாற்றமுடியாது!!!

       இவர் மென்மேலும் வெற்றி பெற இத்தருணத்தில் நாமும் வாழ்த்துவோம்., பெருமைப்படுவோம். இந்த குறியீட்டை அவர் தேவநகரி எழுத்தான |ரா| வில் இருந்து வடிவமைத்தாராம்.

No comments:

Post a Comment