தங்களின் வருகைக்கு நன்றி

Sunday, October 31, 2010

வயல்வெளி பார்த்து....வாழுகிறேன் கணிப்பொறியோடு !

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !


சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கைதொலைந்து போகுமோ ?

சொந்த பந்த உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்(Zip File)
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை தொலைந்து போகுமோ மொத்தமும்!
புரியாது புலம்புகிறேன் நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்

சொந்தங்களோடு
சோறு திண்பவன் யாரடா ?

இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

No comments:

Post a Comment